ஆன்லைன் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் Online abuse and harassment
ஆன்லைன் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் என்றால் என்ன?
ஆன்லைன் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் என்பது ஒருவர் இணையம் அல்லது சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மற்றொரு நபரைத் துன்புறுத்துதல், மிரட்டுதல், கொடுமைப்படுத்துதல் அல்லது அச்சுறுத்துதல் ஆகும். இது செய்திகள், இடுகைகள் அல்லது பிற ஆன்லைன் செயல்கள் மூலம் நிகழலாம். இது அந்த நபரை வருத்தம், பயம் அல்லது பாதுகாப்பற்றதாக உணர வைக்கும்.
ஒரு நாட்டிற்காகவோ அல்லது அதன் சார்பாகவோ ஆன்லைன் துஷ்பிரயோகம் அல்லது துன்புறுத்தல் மேற்கொள்ளப்பட்டால், இது ஒரு வகையான வெளிநாட்டு தலையீடு ஆகும். ஆன்லைன் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் ஆகியவை மன உளைச்சலை ஏற்படுத்தும். ஆன்லைனில் நீங்களோ அல்லது உங்கள் சமூகமோ துஷ்பிரயோகம் செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டால் நீங்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும், என்ன ஆதரவு கிடைக்கிறது மற்றும் நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதை அறிந்து கொள்வது முக்கியம்.
நீங்கள் ஆன்லைனில் துன்புறுத்தப்பட்டாலோ அல்லது அச்சுறுத்தப்பட்டாலோ என்ன செய்ய வேண்டும்
ஆன்லைனில் பாதுகாப்பாக இருத்தல்
ஆன்லைனில் பாதுகாப்பாக இருக்க நீங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு ஆன்லைனில் பாதுகாப்பாக இருத்தல் என்பதைப் பார்க்கவும்.