வெளிநாட்டு தலையீட்டின் உதாரணங்கள் Examples of foreign interference
வெளிநாட்டு அரசின் தலையீட்டினால் இன சமூகங்கள் அனுபவிக்கும் உதாரணங்கள் சில இங்கே உள்ளன. இந்த உதாரணங்கள் இன சமூகங்களுக்கான அமைச்சகத்துடன் இன சமூகங்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை.
இந்த உதாரணங்களில் "வெளிநாட்டு அரசு" என்பது நியூசிலாந்தைத் தவிர வேறு எந்த நாட்டையும் குறிக்கிறது. நியூசிலாந்திற்கு வெளியே உள்ள நாடுகளைக் குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது.
சமூக உறுப்பினர்கள் பெரும்பாலும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பங்களைப் பார்க்க தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்ல விரும்புகிறார்கள். இதற்கு, அவர்கள் தூதரக சேவைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். இந்த சேவைகள் ஒரு நாட்டின் தூதரகம் அல்லது தூதரகத்தால் வெளிநாட்டில் உள்ள குடிமக்களுக்கு வழங்கப்படுகின்றன, மேலும் பாஸ்போர்ட், விசாக்கள், பயண ஆவணங்கள் வழங்குதல் மற்றும் பிற சட்ட விஷயங்களைக் கையாளுதல் உட்பட அடங்கும்.
நியூசிலாந்தில் உள்ள ஒரு இன சமூகத்தின் உறுப்பினர்கள், அந்த வெளிநாட்டு அரசை விமர்சிக்கும் நியூசிலாந்தில் உள்ள குழுக்களுடனோ அல்லது மக்களுடனோ தொடர்பு கொண்டால், அவர்களுக்கு பாஸ்போர்ட் புதுப்பித்தல் அல்லது விசாக்கள் கிடைக்காது என்று தூதரக ஊழியர்களால் கூறப்பட்டது. இது சமூகத்தை தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவோ, குறிப்பிட்ட நபர்களிடம் பேசவோ, எதிர்ப்பு தெரிவிக்கவோ அல்லது குழுக்களில் சேரவோ முடியாது என்று உணர வைக்கிறது. இந்த கட்டுப்பாடுகள் நியூசிலாந்தில் உள்ள சமூகத்தை வெளிநாட்டு அரசிடம் சிக்கிக்கொண்டதாகவும் மற்றும் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் உணர வைக்கிறது. மக்கள் தங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் பார்க்க பயணம் செய்ய இயலாதபோது, இது அவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் நல்வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு சமூகத்தில், ஒரு வழிபாட்டுத் தலம் வெளிநாட்டு தலையீட்டால் குறிவைக்கப்பட்டது. மிகவும் மத நம்பிக்கை கொண்டவர் போன்று தோன்றிய ஒரு புதிய உறுப்பினர் சமூகங்களின் சமய நடவடிக்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக உருவாகினார். அவர்கள் அரசியலைப் பற்றி அதிகம் பேச ஆரம்பித்தனர் மேலும் மக்களை தங்கள் சொந்த நாட்டு அரசாங்கத்தை ஆதரிக்குமாறு கூறினார். மறையுரைகள் அரசியலைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். புதிய உறுப்பினர் வெளிநாட்டு அரசினை மக்கள் விமர்சிப்பதை தடுக்கவும் முயன்றார். இவை அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அவர்கள் வெளிநாட்டு அரசினால் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
புதிய உறுப்பினர் இருந்தபோது வெளிநாட்டு அரசினை விமர்சித்த சமூக உறுப்பினர்கள், குறுஞ்செய்திகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அனாமதேய மிரட்டல்களைப் பெற்றனர். புதிய உறுப்பினர் வருவதற்கு முன்பு இது நடக்கவில்லை. சமூகம், புதிய உறுப்பினர் வெளிநாட்டு அரசுக்கு அனைத்தையும் தெரிவிக்கிறார் என்று சந்தேகித்தது. அவர்கள் இந்த பிரச்சனைகள் அனைத்தும் அந்த புதிய உறுப்பினர் சேர்ந்து மக்களை வெளிநாட்டு அரசினை ஆதரிக்க வைக்க முயற்சித்த பிறகுதான் ஆரம்பித்ததாக பார்க்கிறார்கள். இந்த நிலைமை மக்களை பாதுகாப்பற்றதாகவும், ஒருவருக்கொருவர் அவநம்பிக்கையுடனும் உணர வைத்தது. இந்த வழிபாட்டுத் தலத்தில் சமூகம் ஒன்று கூடி அவர்களின் வழிபாட்டில் கவனம் செலுத்துவது கடினமாகிவிட்டது.
ஒரு சமூகத்தில், மக்கள் தங்கள் சமூக உறுப்பினர்களில் ஒருவரின் சந்தேகத்திற்குரிய நடத்தையை கவனித்தனர். இந்த நபர் சமூகத்தில் உள்ள மற்றவர்களின் அரசியல் பார்வைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி எப்போதும் கேட்பது போல் தோன்றியது. சமூகம் அந்த நபரிடம், யார் அவர்கள் பிறந்த நாட்டின் அரசாங்கத்தை பற்றி விமர்சிப்பவர்களை நியூசிலாந்தில் உள்ள அவர்களின் தூதரகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று வெளிநாட்டு அரசு கேட்டுக்கொண்டதை கண்டுபிடித்தது.
இவருடன் பேசி, வெளிநாட்டு அரசை விமர்சித்த சில சமூக உறுப்பினர்கள், அவர்கள் பிறந்த நாட்டிற்கு வந்தபோது, விசா பிரச்சனைகள், விமான நிலையத்தில் கேள்வி கேட்டல் போன்ற எதிர்பாராத பிரச்சனைகளை எதிர்கொண்டனர். இதற்கு முன்பு அவர்களுக்கு இப்படி நடந்ததில்லை. அந்த சமூக உறுப்பினருடனான அவர்களின் உரையாடல்கள் தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டதால் இந்த பிரச்சனைகள் ஏற்பட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். இது சமூகத்தில் உள்ள மக்களிடம் பயத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியது, எனவே அவர்கள் தங்கள் உண்மையான கருத்துக்களை வெளிப்படுத்துவதை நிறுத்தினர்.
சமூக ஊடகங்களில் ஒரு வெளிநாட்டு அரசை அடிக்கடி பகிரங்கமாக விமர்சிக்கும் ஒரு சமூக உறுப்பினர் வெளிநாட்டு தலையீட்டினை அனுபவித்தார். அவர்களின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் போன்ற தனிப்பட்ட தகவல்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன—இது டாக்சிங் எனப்படும். டாக்சிங் செய்தவர்களை டாக்சிங் செய்யுமாறு வெளிநாட்டு அரசு கேட்டுக் கொண்டது. சமூக உறுப்பினருக்கு மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வந்தன. அவர்களின் சமூக ஊடக கணக்குகளுக்கும் நிறைய இழிவுபடுத்தும் கருத்துகள் வந்தன. சமூக உறுப்பினர் மிகவும் பயமாகவும் பாதுகாப்பற்றதாகவும் உணர்ந்தார்.
நியூசிலாந்தில் வெளிநாட்டு அரசுக்காக பணிபுரியும் நபர்களால் இந்த டாக்சிங் செய்யப்பட்டது பின்னர் அவர்களுக்குத் தெரியவந்தது. சமூக உறுப்பினரை பயமுறுத்த வேண்டும் என்பதற்காக அவர் டாக்சிங் செய்யப்பட்டார், ஏனென்றால் அப்போதுதான் அந்த சமூக உறுப்பினர் சமூக ஊடகங்களில் வெளிநாட்டு அரசினை பகிரங்கமாக விமர்சிப்பதை நிறுத்துவார். அவர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதையும் பேசுவதையும் நிறுத்திவிட்டனர்.
ஒரு சமூக உறுப்பினரை ஒரு வெளிநாட்டு அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் அணுகினார். அந்த வெளிநாட்டு அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு குழுவில் அவர்கள் சேராவிட்டால் அவர்கள் பிறந்த நாட்டில் உள்ள அவர்களது குடும்பம் பாதிக்கப்படும் என்று அவர்களிடம் கூறப்பட்டது. வெளிநாட்டு அரசின் சார்பாக நியூசிலாந்தில் உள்ள அவர்களது சமூகத்திற்குள் அரசியல் செய்திகளை பரப்புவதே அந்த குழுவின் நோக்கமாக இருந்தது. அந்த சமூக உறுப்பினர் அந்தக் குழுவில் சேர விரும்பவில்லை, ஆனால் அவர்கள் தங்கள் குடும்பத்தைப் பற்றி பயந்தார்கள், மேலும் தங்கள் குடும்பத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
குழுவில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், சமூக உறுப்பினர் அச்சுறுத்தலுக்கு ஆளானார் மற்றும் பாதுகாப்பற்றவராக உணர்ந்தார். அவர்கள் அந்தக் குழுவை ஆதரிக்கவில்லை என்பதைக் வெளிப்படுத்தும் எதையும் அவர்கள் சொல்லாமல் பார்த்துக் கொண்டனர். அவர்கள் தங்கள் உண்மையான கருத்துக்களை வெளிப்படுத்த முடியாது என்று உணர்ந்தார்கள். அவர்களின் பேச்சு சுதந்திரம் பறிக்கப்பட்டது.
ஆர்வலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள்
ஒரு ஆர்வலர் அவரின் பூர்வீக நாட்டை விமர்சித்ததற்காக அவர் அந்த நாட்டிற்கு திரும்பிச் சென்றபோது அதிகாரிகளால் பாதிக்கப்பட்டார். நியூசிலாந்தில் உள்ள சமூகம் இதைப் பற்றி கேள்விப்பட்டது, மற்றும் தங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கு இது நடப்பதைப் பற்றி மிகவும் கவலைப்பட்டது.
சில மாதங்களுக்குப் பிறகு, நியூசிலாந்தில், ஒரு சமூக உறுப்பினர் வெளிநாடுகளுக்குச் சென்றால் கவனமாக இருக்க வேண்டும் என்ற அச்சுறுத்தும் குறுஞ்செய்திகளைப் பெற்றார். அவர்கள் நியூசிலாந்தில் இருந்தபோது தங்கள் சொந்த நாட்டில் மனித உரிமை கவலைகள் குறித்து பேசி வந்தனர். இப்போது, அவர்கள் தங்கள் குடும்பத்தைப் பார்ப்பது குறித்தும், அவர்கள் பிறந்த நாட்டின் அரசாங்கத்திடமிருந்து கைது வாரண்ட்கள் மீது செயல்படக்கூடிய நாடுகளில் நிறுத்துவது குறித்தும் மிகவும் கவலையாக உள்ளனர்.
அவர்கள் பிறந்த நாட்டைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் அந்த நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தை பார்வையிட்டனர், மேலும் இப்போது அவர்களின் குடும்பத்தினர் நியூசிலாந்தில் மனித உரிமைகள் பற்றி பேசுவதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். இந்த அழுத்தம் சமூக உறுப்பினரை தங்கள் குடும்பத்துடனான தொடர்பை நிறுத்தச் செய்தது ஏனென்றால் அவர்கள் தங்கள் குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து அஞ்சுகிறார்கள். நியூசிலாந்தில் தங்கள் சொந்த பாதுகாப்பு மற்றும் பேச்சு சுதந்திரம் குறித்தும் அவர்கள் கவலைப்பட்டார்கள்.
வெளிப்படையாகப் பேசிய பிறகு வங்கிச் சேவையை நிறுத்துதல்
நியூசிலாந்தில் உள்ள ஊடகங்களுக்கு, ஒரு சமூக உறுப்பினர் தங்கள் பிறந்த நாட்டிற்கு எதிராகப் பேசினார். இதற்குப் பிறகு, நியூசிலாந்தில் உள்ள அவர்களின் வங்கியிலிருந்து அவர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. கடுமையான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சர்வதேச பட்டியலில் அவர்களின் பெயர் இருப்பதால் அவர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என்று கூறினர். இது ‘டிபாங்கிங்’ (வங்கி கணக்கு முடக்கம்) என்று அழைக்கப்படுகிறது. அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால் அவர்களால் அவர்களுடைய பணத்தைப் அணுக முடியவில்லை.
எந்த குற்றமும் செய்யாததால், அந்த சமூக உறுப்பினர் மிகவும் கவலையடைந்தார். அவர்களை அச்சுறுத்தவும், அவர்கள் பிறந்த நாட்டை விமர்சிப்பதைத் தடுக்கவும் அவர்கள் பிறந்த நாட்டினால் தங்கள் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர்கள் நம்பினர். வெளிப்படையாகப் பேசுவதை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர்கள் உணர்ந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தகவல்களைப் பகிர வேண்டும் என்ற அழுத்தம்
ஒரு இன சமூகம் ஒரு கலாச்சார நிகழ்வை ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் பிறந்த நாட்டின் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு ஒரு பெரிய நன்கொடையை அளித்தார். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தங்கள் சமூகத்தில் உள்ளவர்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொண்டால் மட்டுமே அவர்களுக்கு நன்கொடை கிடைக்கும்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இந்த சலுகையைப் பற்றி மிகவும் சங்கடமாக இருந்தார். அவர்கள் நிகழ்வை ஆதரிப்பதற்காக நன்கொடையை ஏற்க வேண்டிய அழுத்தத்தை உணர்ந்தனர், ஆனால் சமூகத்தின் தனிப்பட்ட தகவலைப் பகிர விரும்பவில்லை. அவர்கள் நன்கொடையை மறுத்தபோது, அவர்கள் பயந்தார்கள். அவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டதால் தங்களுக்கு என்ன ஆகுமோ என்ற கவலை அவர்களுக்குள் இருந்தது. அவர்கள் தங்கள் சொந்த சமூகத்தில் சௌகரியமாக உணருவது கடினமாகிவிட்டது.
சமூக உறுப்பினர்களைக் கண்காணிக்க நிதி ரீதியான நிர்ப்பந்தம்
ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குப் பொருளாதாரச் சிக்கல்கள் இருந்தன. அவர்களது சமூகத்தில் உள்ள ஒருவர், ஒரு வெளிநாட்டு அரசின் சார்பாக அவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு வேலை வழங்குவதாக கூறினார். நியூசிலாந்தில் உள்ள சமூக உறுப்பினர்களைக் கண்காணித்து அவர்களை பற்றி வெளிநாட்டு அரசுக்கு தெரிவிப்பது பணியாக இருந்தது. அவர்கள் வெளிநாட்டு அரசை விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினர்.
அந்த சமூக உறுப்பினர் மன உளைச்சலுக்கு ஆளானார். அவர்கள் தங்கள் சமூகத்தைக் கண்காணிக்க விரும்பவில்லை. அவர்களின் நிதி நிலைமை அவர்களை வற்புறுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டது. அவர்கள் இல்லை என்று மறுத்துவிட்டனர். ஆனால் அவர்கள் மறுத்ததால் அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று கவலைப்பட்டார்கள். மீண்டும் அவர்கள் தங்களை அணுகக்கூடும் என்ற அச்சத்தில், அவர்கள் சமூகத்திலிருந்து தங்களை தனிமைப்படுத்தத் தொடங்கினர். இந்த நடவடிக்கைகளில் வேறு யார் ஈடுபட்டிருக்க கூடும் என்பது குறித்து நிச்சயமற்ற தன்மையை உணர்ந்ததால், அவர்கள் சமூகத்தின் மீதான நம்பிக்கையையும் இழந்தனர்.